ஆப்நகரம்

தமிழகத்தின் இந்திரா காந்தி ஜெ., : ஈவிகேஎஸ்!

‘முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் இந்திரா காந்தியாக திகழ்ந்தவர்,’ என முன்னாள் தமிழக காங்., கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

TOI Contributor 6 Dec 2016, 2:55 am
சென்னை: ‘முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் இந்திரா காந்தியாக திகழ்ந்தவர்,’ என முன்னாள் தமிழக காங்., கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Samayam Tamil jayalalitha is tamil nadus indira gandhi says evks
தமிழகத்தின் இந்திரா காந்தி ஜெ., : ஈவிகேஎஸ்!


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து முன்னாள் தமிழக காங்., கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘
அரசியல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இருப்பினும், அவர் மீது தனிப்படட முறையில் மரியாதை உள்ளது. எடுத்த காரியத்தை அவர் முடிக்காமல் இருந்ததே இல்லை. எதற்கும் அஞ்சாதவர். தமிழகத்தின் இந்திரா காந்தி என்று சொன்னால் மிகையாகாது. அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் பள்ளியில் படித்த போது ஒரு வருடம் சீனியர் அவர். கொள்கை அளவில் அவர் வேறுபட்டிருந்தாலும் வீரம் மிக்கவர். தன்னம்பிக்கையுடன் திகழ்ந்தவர்.’ என்றார்.

அடுத்த செய்தி