ஆப்நகரம்

அணையா விளக்குடன் ஜெ., நினைவிடம்: பிறந்தநாளில் திறக்க முடிவு

அணையா விளக்குடன் ஜெ., நினைவிடம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 8 Dec 2016, 12:05 pm
சென்னை: அணையா விளக்குடன் ஜெ., நினைவிடம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalitha memorial construction will open on her birthday feb 24th
அணையா விளக்குடன் ஜெ., நினைவிடம்: பிறந்தநாளில் திறக்க முடிவு


மறைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி, தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உத்தரவுப்படி, நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

அவருடைய சமாதியில் அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் ஆகியவை இடம்பெறும். மேலும் “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக அவரது நினைவிடத்திற்கு “அம்மா” என்று பெயர் வைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடத்தில் இருப்பது போன்று, அணையா விளக்கு ஒன்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது வெண்கலச் சிலையும், வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளும் நிறுவப்பட உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி, நினைவிடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayalalitha Memorial construction will open on her birthday Feb 24th.

அடுத்த செய்தி