ஆப்நகரம்

எனக்கு சசிகலாவுக்கும் தான் போட்டி : ஜெ., மருமகள் தீபா

சரியான முறையில் சர்ந்தப்பம் ஏற்பட்டால் அதிமுக-வில் இணைவேன் , சசிகலா முடிவை பொறுத்தே எனது அரசியல் பிரவேசம் இருக்கும் என்று ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

TNN 24 Dec 2016, 6:28 pm
சென்னை : சரியான முறையில் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிமுக-வில் இணைவேன் , சசிகலா முடிவை பொறுத்தே எனது அரசியல் பிரவேசம் இருக்கும் , ​ எனக்கு சசிகலாவுக்கும் தான் போட்டி என்று ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalitha niece deepa says her political decision after sasikala move
எனக்கு சசிகலாவுக்கும் தான் போட்டி : ஜெ., மருமகள் தீபா


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி மரணமடைந்தார். இதனைதொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். இந்தநிலையில் ஜெ.,யின் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகிகளோ ஜெ., தோழி சசிகலாதான ஜெ.,வின் இடத்தை நிரப்பமுடியும் என்று கூறிவருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் சசிகலாவிற்கு ஏதிரான கருத்துகள் வலுப்பெற்று வருகிறது. மேலும் ஜெ.,வின் மருமகள் தீபா தான் முதல்வராக வேண்டும். அதிமுக தலைமையை ஏற்கவேண்டும் என்று தமிழகத்தில் பரவலாக கருத்து நிலவிவருகிறது. தீபாவும் தனக்கு அரசியலுக்கு வர விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் ஜெ.,வின் மருமகள் தீபா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்," ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் வந்த போது என்னை சசிகலா தரப்பு உள்ளே அனுமதிக்கவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ராஜாஜி மகாலில் வைத்துதான் சிறிது நொடிகள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டேன்.

சசிகலா எப்படி ஜெ.,வின் அரசியல் வாரிசு ஆக முடியும் . நான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. நான் ஏன் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இருக்க கூடாது. சரியான முறையில் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிமுக-வில் இணைவேன். அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை.மக்களின் விருப்பத்தால் தான் நான் அரசியலுக்கு வருவேன். ​ எனக்கு சசிகலாவுக்கும் தான் போட்டி. சசிகலா முடிவை பொறுத்தே எனது முடிவு இருக்கும். எனக்கு பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை " என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி