ஆப்நகரம்

"அம்மாவின் அன்புக்காக பல முறை ஏங்கியிருக்கிறேன்"-முதல்வர் ஜெயலலிதாவின் மறுபக்கம்..!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒரு அரசியல்வாதியாக பார்த்துள்ள நாம்,அவர் தன் அம்மாவின் அன்புக்காக எப்படி ஏங்கியுள்ளார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

TNN 14 Oct 2016, 6:01 pm
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒரு அரசியல்வாதியாக பார்த்துள்ள நாம்,அவர் தன் அம்மாவின் அன்புக்காக எப்படி ஏங்கியுள்ளார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalitha open up her feeling about mothers love in a television interview
"அம்மாவின் அன்புக்காக பல முறை ஏங்கியிருக்கிறேன்"-முதல்வர் ஜெயலலிதாவின் மறுபக்கம்..!


கடுமையான அரசியல்வாதியாவே பார்க்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் “சிமி கரேவல்” என்ற பெண் பத்திரிக்கையாளக்கு அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் தன் சொந்த வாழ்க்கை குறித்தும்,அரசியலில் தன்னைப்பற்றி கூறப்படும் சர்ச்சைகள் குறித்தும் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

வெற்றி,தோல்வி,வழக்கு ஆகியவற்றினால் எனக்கு கோபம் வந்திருக்கிறது.ஆனாலும் ஒரு தலைவராக இருப்பவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார்.அதையே நானும் செய்தேன் என அந்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.தனக்கு மன உறுதி,சுயக் கட்டுப்பாடு அதிகம் எனவும் அதனால்தான் தன்னால் உணர்ச்சிகளையும்,அழுகையையும் கட்டுப்படுத்த முடிகிறது எனவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தான் அடிப்படையில் கூச்ச சுபாவம் உள்ள பெண் என்றும்,மற்றவர்களால் கவனிப்படுவதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் தன் அம்மாவின் அன்புக்காக எப்படியெல்லாம் ஏங்கியுள்ளேன் என்பதை அவர் விவரிக்கும் போதுதான் ஜெயலலிதாவின் மற்றொரு பக்கம் தெரியவருகிறது
.”அம்மாவுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பார்க்க வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என் அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அவரை விடக்கூடாது என்பதற்காக , நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள். ஆனால், அவர் சென்னை கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துக் கொள்வேன்..

காலையில் எழுந்திருக்கும்போது,என் சித்தியின் சேலை தலைப்புத்தான் என் கையில் இருக்கும்.காலையில் எழுந்து அம்மாவை பார்க்க வேண்டும் என, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். உண்மையில் பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் தாயாருக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

தன் அம்மாவுக்கு பிறகு தனது தாய்,தந்தை,வழிகாட்டி ஆகிய அனைத்துமாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார் எனவும்,அவர் ஒரு கவர்ந்திழுக்கும் ஆளுமை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர தன்னுடைய அரசியல் வாழ்க்கை,அவர் அரசியலில் சந்தித்த பிரச்சனைகள்,அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என அவர் பல தகவல்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டியை பார்க்க விருப்பமுள்ளவர்களுக்காக கீழே அந்த வீடியோவை பகிர்ந்துள்ளோம்.
English Summary:

Jayalalitha open up her feeling about Mother's love in a television interview

அடுத்த செய்தி