சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திரை உலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வருக்கு நேற்று முன்தினம் இதய செயலிழப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி தமிழக முதல்வரின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் (டிச.5-ம் தேதி) பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வருக்கு மிகவும் நெருக்கமான நடிகர்திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்தினர், நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர்கள் விஜய், சரத்குமார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சத்தியராஜ், மனோபாலா, கார்த்தி, இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், பி.வாசு இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jayalalitha passed away: people from Cine industries condolence
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வருக்கு நேற்று முன்தினம் இதய செயலிழப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி தமிழக முதல்வரின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் (டிச.5-ம் தேதி) பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வருக்கு மிகவும் நெருக்கமான நடிகர்திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்தினர், நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர்கள் விஜய், சரத்குமார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சத்தியராஜ், மனோபாலா, கார்த்தி, இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், பி.வாசு இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jayalalitha passed away: people from Cine industries condolence