ஆப்நகரம்

ஜெ., இல்லத்தில் இத்தனை கிலோ தங்கமா? அரசிதழ் சொன்ன தகவல்!

சென்னையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 11:37 am
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா இல்லம் தற்போது தமிழக அரசு மற்றும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
Samayam Tamil jayalalitha poes garden home


இந்த இல்லத்திற்கான முன்னாள் சட்ட வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோருக்கான இழப்பீடு மற்றும் வரி நிலுவைத் தொகை உட்பட சுமார் 67.9 கோடி ரூபாயை நகர சிவில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசாங்கம் டெபாசிட் செய்துள்ளது. இதனையடுத்து வேதா இல்லம் அரசுடைமையாக மாற்றப்பட்டது.

தற்போது இந்த முடிவு அரசிதழில் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 601 கிலோ வெள்ளிப் பொருள்கள் உட்பட 32 ஆயிரத்து 721 பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

மேலும் 11 டிவிக்கள், 10 பிரிட்ஜ், 38 ஏசி, உள்ளிட்ட 556 பர்னிச்சர் பொருள்கள் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

துணிகள், துண்டுகள், போர்வைகள், செருப்புகள் என 10 ஆயிரத்து 438 பொருள்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழகம் வரும் வட மாநிலத் தொழிலாளர்கள்!

இந்நிலையில் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி