ஆப்நகரம்

ஜெ., மறைந்து இரண்டே மாதங்கள் ஆன நிலையில் ஆட்சியை கைப்பற்றும் சசிகலா

ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் சசிகலா தமிழக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

TNN 5 Feb 2017, 5:05 pm
சென்னை: ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் சசிகலா தமிழக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
Samayam Tamil jayalalitha s death after two months sasikala became admk legislatur
ஜெ., மறைந்து இரண்டே மாதங்கள் ஆன நிலையில் ஆட்சியை கைப்பற்றும் சசிகலா



ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 136 எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக சட்டபசபை குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் தமிழக முதல்வராக சசிகலா வரும் பிப்ரவரி 7 அல்லது 9ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தெர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடலநலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து டிசம்பர் 31-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா கட்சியை கைப்பற்றினார். தற்போது சட்டசபைக் குழு .தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலா இதன்மூலம் அவர் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார்.

அடுத்த செய்தி