ஆப்நகரம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஜெ. ஆடியோ வெளியீடு – ஸ்டாலின்

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஜெயலலிதாவின் ஆடியோ வெளியிடப்பட்டிருப்பதாக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 27 May 2018, 3:11 am
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஜெயலலிதாவின் ஆடியோ வெளியிடப்பட்டிருப்பதாக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil MK Stalin


தூத்துக்குடியில் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தொிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது பேசிய ஆடியோ பதிவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடா்பாக கருத்து தொிவித்துள்ளாா்.

அவா் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்சிச்சூடு சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில் இச்சம்பவத்தை திசை திருப்பும் விதமாகவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வாயிலாக ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டொ்லைட் ஆலையை மூட அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி