சென்னை: தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியதும் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பதவியேற்றார்.
தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவைக்கான பதவிக் காலம் கடந்த 22-ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து, 15-வது சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த 19-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் 132 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருடன் இணைந்து அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், ஜெயலலிதாவுக்கு எம்எல்ஏ-வாக தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
முன்னதாக, அவை கூடியதும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேலுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவைக்கான பதவிக் காலம் கடந்த 22-ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து, 15-வது சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த 19-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் 132 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருடன் இணைந்து அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், ஜெயலலிதாவுக்கு எம்எல்ஏ-வாக தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
முன்னதாக, அவை கூடியதும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேலுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.