ஆப்நகரம்

கைநாட்டு வைத்த ஜெயலலிதா

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையொப்பம் வைத்துள்ளார்.

TNN 28 Oct 2016, 10:23 pm
சென்னை : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார்.
Samayam Tamil jayalalitha thumb for by election nomination b form
கைநாட்டு வைத்த ஜெயலலிதா


தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில். திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றம் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிவம் பி-ல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி. பாலாஜி, இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். மேலும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து ஈட்டுள்ளார். .

அடுத்த செய்தி