ஆப்நகரம்

அதிமுக ஒற்றைத் தலைமை: நன்னடத்தையில் விடுதலையாகிறாா் சசிகலா?

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 11:38 am
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பெங்களூரு பரப்பர அக்ரஹார சிறைத்துறை நிா்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Samayam Tamil Sasikala 1.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பினை 2017 பிப்ரவரியில் உச்சநீதின்றம் வழங்கியது. இதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்று தற்போது இரண்டரை வருடங்களை நெருங்கிவிட்டது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதமே வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் சிறை தண்டனை வரும் 2021ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. நன்னடததை அடிப்படையில் அவரை ஓராண்டுக்கு முன்பே விடுவிக்கலாம். இதன்படி முடிவு எடுத்தால் அடுத்த ஆண்டு அவர் விடுதலை செய்யப்படலாம். ஆனால் இந்த ஆண்டு இறுதியிலேயே விடுதலை செய்யலாம் என சிறைத்துறை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை, இடைத் தோ்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினா் ராஜன் செல்லப்பா திடீரென அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொிவித்திருந்தாா். இந்த கருத்துக்கு அக்கட்சியில் சிலா் ஆதரவு தொிவித்திருந்தனா்.

இந்நிலையில் சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால், அவரே அதிமுகவிற்கு மீண்டும் தலைமை ஏற்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி