ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார்.

TNN 6 Dec 2016, 2:25 pm
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார்.
Samayam Tamil jayalalithaa death arvind kejriwal reaches chennai to pay homage
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்


சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள, தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய அளவிலான பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி சற்று முன் நேரில் வந்து, அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் வர உள்ளார். அத்துடன் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் சென்னை வந்து, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவார்கள், என அறிவிப்பு வெளியானது.

இதன்படி, தற்போது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள், ராஜாஜி அரங்கம் வந்து, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jayalalithaa death: Arvind Kejriwal, Chandrababu Naidu reaches chennai to pay homage

அடுத்த செய்தி