ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை

முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNN 6 Dec 2016, 12:23 pm
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalithaa death courts remain closed tamil nadu
தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை


கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று திங்கட் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 6 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி