ஆப்நகரம்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மனா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 21 Nov 2017, 12:29 pm
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil jayalalithaa death enquiry committe may summon doctor richard beale
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மனா?


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு 75 நாட்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது இவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தமிழக அரசு சார்பில் விசாரணைக் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நாளை (நவம்வர் 22) வரை புகார் அளிக்கலாம். இதன் பின்னர் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை துவங்கும். முக்கிய புள்ளிகளையும் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

இதன் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரையும் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி