ஆப்நகரம்

Jayalalithaa: தம்பிதுரை, லண்டன் மருத்துவருக்கு சம்மன்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 28 Dec 2018, 5:20 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்துவிசாரணைக்கு ஆஜராகும்படிமக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்பீலே ஆகியோருக்குஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil download (1)


ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 11 ஆம் தேதி ஆஜராகுமாறு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதற்கு முன்னதாக, 9 ஆம் தேதி ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தலண்டன் மருத்துவர் ரிச்சர்டு பிலே-வுக்குசம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், காணோலிக்காட்சி மூலம் ரிச்சர்டு ஆஜராக உள்ளார்.

இதேபோல, கடந்த 18ம் தேதி ஆஜராகாத சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, 7-ம் தேதி ஆஜராகுமாறு 2 வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும 8 ஆம் தேதி ஆஜராகுமாறு துணைமுதல்வா் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் 2 வது முறையாக சம்மன் அனுப்பப்படுள்ளது.

அடுத்த செய்தி