ஆப்நகரம்

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

TOI Contributor 6 Dec 2016, 1:20 am
சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalithaa death schools colleges to remain closed for three days in tn
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை (06.12.16) முதல் வியாழக்கிழமை (08.12.16) வரை தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை பள்ளி கல்வித்துறை செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார். விடுமுறை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிலவும் குழப்பத்தை தீர்ப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று (05.12.16) இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார் என்று தெரிவித்தது.

அடுத்த செய்தி