ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பணிப்பெண்கள் ஆஜர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேதா இல்லத்தில் பணியாற்றிய மூன்று பணியாளர்கள் ஆஜராகினர்.

Samayam Tamil 14 Dec 2018, 12:47 pm
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேதா இல்லத்தில் பணியாற்றிய மூன்று பணியாளர்கள் ஆஜராகினர்.
Samayam Tamil 987


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அத்துடன் விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள்,ஜெயலலிதா, சகிகலாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர்கள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,அப்பலோ மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில்இன்றுசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேதா இல்லத்தில் பணிபெண்களாக இருந்த தேவிகா, பூமிகா மற்றும் சிவயோகம் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வேதா இல்லத்தில் என்ன நடந்து ?,என்பது தொடர்பாக பணியாளர்களிடம்விசாரணை செய்யபடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி