ஆப்நகரம்

சசிகலா தலையை தொட்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!

உடன்பிறவா சகோதரியை இழந்து ஆற்றாமையால் வாடும் சசிகலாவின், தலையை தொட்டு, தட்டிக் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.

TOI Contributor 6 Dec 2016, 5:43 pm
உடன்பிறவா சகோதரியை இழந்து ஆற்றாமையால் வாடும் சசிகலாவின், தலையை தொட்டு, தட்டிக் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.
Samayam Tamil jayalalithaa demise pm modi blessed sasikala
சசிகலா தலையை தொட்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!


உடல்நலக்குறைவால் உயிரிழந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஜெயலலிதாவின் சடலத்திற்கு, மலர் வளையம் வைத்து, வணங்கிய அவர், அருகே நின்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

இதன்பின், விடிய விடிய ஜெயலலிதா உடனே பயணப்பட்டுவந்த சசிகலா அருகே சென்ற பிரதமர் மோடி, அவரின் தலையை தொட்டு, தட்டிக் கொடுத்தார். கதறியழுத சசிகலாவை, அழ வேண்டாம் எனக் கூறிய பிரதமர் மோடி, தலையை தொட்டுக் கொடுத்தபடி, ஆறுதல் தெரிவித்தார். அழ வேண்டாம் என்றும், நாங்கள் துணை நிற்போம் என்றும் கூறிய பிரதமர், பின்னர் அங்கிருந்து வருத்தத்துடன் ஜெயலலிதாவின் சடலத்தைப் பார்த்தபடி, வெளியேறினார்.

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நாட்கள் முதலாக, ஜெயலலிதா, சசிகலா ஆகியோருடன் நெருங்கிய நண்பராக, பிரதமர் மோடி உறவு பாராட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.

Jayalalithaa demise: PM Modi blessed Sasikala and grieves.

அடுத்த செய்தி