முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதா ரெட்டி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
''தமிழக முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தாலும் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று இரவு தனது பதிவில், ''முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இன்று காலையும், முதல்வரின் ஆரோக்கியம் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழு முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சங்கீதா இவ்வாறு பதிவிட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
''தமிழக முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தாலும் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று இரவு தனது பதிவில், ''முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இன்று காலையும், முதல்வரின் ஆரோக்கியம் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழு முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சங்கீதா இவ்வாறு பதிவிட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.