ஆப்நகரம்

ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகியுள்ளது: மனோஜ் பாண்டியன்!

சென்னை: போயஸ்கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது உறுதியாகியுள்ளது என முன்னாள் எம்பி. மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2018, 6:29 pm
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையத்தில் இன்று அப்போலோ நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
Samayam Tamil 4

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வெங்கட்ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி ஷங்கர் மற்றும் அருட்செல்வன் ஆகியோரும் ஆஜாரானார்கள்.

அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் ஆணையத்தில் ஆஜரானார். ஆணையத்தில் ஆஜரான பின் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், அளித்த பேட்டியில்,

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அங்கிருந்த இரண்டு பணிப் பெண்களை ஏன் விசாரிக்கவில்லை. அனைத்து வாக்குமூலங்களிலும் முரண்பாடு உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீங்க வேண்டும்.சில போலீஸ் அதிகாரிகள் உண்மையை மறைத்துள்ளனர். மயக்கமான நிலையில்தான் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார். ’ என்றார்.

அடுத்த செய்தி