ஆப்நகரம்

டீ கடைக்காரருக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதா!

தமிழக மக்களுக்கு நீங்கா துயரத்தை முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்தது. போயஸ் கார்டன் அருகில் ஜெயலலிதாவிடம் பல முறைநேரில் பேசிய டீ கடை உரிமையாளர் ஒருவருக்கு இந்த துயரம் பேரடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

TNN 9 Dec 2016, 1:18 am
தமிழக மக்களுக்கு நீங்கா துயரத்தை முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்தது. போயஸ் கார்டன் அருகில் ஜெயலலிதாவிடம் பல முறைநேரில் பேசிய டீ கடை உரிமையாளர் ஒருவருக்கு இந்த துயரம் பேரடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalithaa gave life for tea seller in plat form at poes garden
டீ கடைக்காரருக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதா!


நாட்டில் எவ்வளவோ அரசியல் தலைவர்களின் இறப்பு ஏற்படுத்திய துயரத்தை காட்டிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மக்களை பேரடியாக உணர்கின்றனர். அவரது இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்நெஞ்சம் படைத்தவரின் மனதையும் கரைத்த ஜெயலலிதாவின் இறப்பு, ஒரு டீ கடைக்காரரை கலங்க வைத்துள்ளது.

போயஸ் கார்டன் முன்பு டீ கடை வைத்திருக்கும் மணி என்பவர் அம்மா இல்லை என்றால் இந்த் இடத்தில் டீ கடை இல்லை என்கின்றார் கண்ணீரோடு. மணி ஜெயலலிதா குறித்து பேசும் போது, “நான் இளைஞராய் இருந்த பொழுது இந்த பல பகுதிகளில் டீ விற்க செல்வேன். அதே போல போயஸ் கார்டன் பகுதிக்கு டீ விற்க வருவேன். அப்பொழுது ஜெயலலிதாவின் வீட்டு செக்யூரிட்டி, பக்கத்து வீட்டினர் என அனைவரிடமும் டீ சப்ளை செய்வேன்.

அவ்வப்போது அம்மா மாடியில் நின்று பார்ப்பார்கள், காரில் செல்லும் போதும் பார்ப்பார்கள். அதுவே சில காலத்தில் அம்மாவை நேரில் கண்டு பேசவும் வலிவகுத்தது.
1986ம் ஆண்டு முதல் போயஸ் கார்டன் பகுதியில் டீ கடை வைத்துள்ளேன். அம்மா 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற பொழுது பிளாட்பார்ம் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டது. அப்போது போலீஸார் எனது கடையும் காலி செய்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஜெயலலிதா என்னிடம் டீ கடை என்கே? என கேட்டார்.

அப்பொழுது கடை காலி செய்துவிட்டனர் என கூறினேன். உடனே போலீஸ் அதிகாரிகள் மற்ற உயர் அதிகாரிகளை அழைத்து மணி இங்கேயே கடை வைத்திருக்கட்டும். அவரை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என கூறினார். அதிலிருந்து இன்று வரை இங்கேயே தான் டீ கடை வைத்து நடத்துகிறேன்.” என உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

தற்போது ஜெயலலிதாவின் மறைவு தமிழக மக்களை விட எனக்கு மிகுந்த பேரடியாக உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி