ஆப்நகரம்

முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம் - அப்பல்லோ மருத்துவ அறிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

TNN 5 Dec 2016, 1:26 pm
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil jayalalithaa health apollo hospitals press release
முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம் - அப்பல்லோ மருத்துவ அறிக்கை


செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் நேற்று மாலை முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிக்கு மாற்றப்பட்டார். அதன் பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மதியம் அப்பல்லோ மருத்துவக் குழுவுடன் இணைந்து சிகிச்சை அளிக்க உள்ளனர் என அப்பல்லோ மருத்துவமனை தலைமை மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி