ஆப்நகரம்

ஆக்சிஜன் தடையின்றி செல்ல ஜெயலலிதாவுக்கு ecmo சிகிச்சை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தற்போது ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

TOI Contributor 5 Dec 2016, 10:55 am
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தற்போது ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
Samayam Tamil jayalalithaa jayalalithaa health is under ecmo treatment
ஆக்சிஜன் தடையின்றி செல்ல ஜெயலலிதாவுக்கு ecmo சிகிச்சை


அவரது இருதயத்திற்கு தேவையான சிகிச்சை Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படும்.

சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு. இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து, கார்பன்டையாக்சைடை வெளியேற்றும்.

இதயம், நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும். ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்தக் கருவி மிகவும் தேவைப்படுகிறது. இருதயத்திற்கு ஆக்சிஜன் சென்றால்தான், உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் செல்லும்.

அடுத்த செய்தி