ஆப்நகரம்

ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எழுத்துப்பூர்வ உத்தரவு வரவில்லை : மருத்துவர் பாலாஜி

சுகாதாரத்துறைச் செயலரின் வாய்மொழி உத்தரவில்தான் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 15 Feb 2018, 10:06 am
சுகாதாரத்துறைச் செயலரின் வாய்மொழி உத்தரவில்தான் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil jayalalithaa thump impression issue doctor balaji in arumugasamy commission
ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எழுத்துப்பூர்வ உத்தரவு வரவில்லை : மருத்துவர் பாலாஜி


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மூன்றாவது முறையாக ஆஜரான பாலாஜியிடம், திருப்பரங்குன்றம் , தஞ்சை, அரவக்குறைச்சி தொகுதி இடைத் தேர்தலுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது தொடர்பாக விசாரணை ஆணையம் முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளது. அதற்குப் பதிலளித்த அவர் , சுகாதாரத்துறைச் செயலரின் வாய்மொழி உத்தரவில்தான், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக கூறியுள்ளார். மேலும், சிகிச்சையிலிருந்து ஜெயலலிதாவிடம் இருந்து கைஎழுத்து பெற முடியாத நிலை இருந்ததாகவும், மாற்றாக அவரிடம் கைரேகை பெறுவது தொடர்பாக முதல்வர் அல்லது தலைமைச் செயலரிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு ஏதும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி