ஆப்நகரம்

கண்டுகொள்ளப்படாத ஜெயலலிதா சமாதி!

மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை பராமரிக்க அ.தி.மு.க., நிர்வாகம் தவறியது.

TOI Contributor 16 Feb 2017, 11:31 am
மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை பராமரிக்க அ.தி.மு.க., நிர்வாகம் தவறியது.
Samayam Tamil jayalalithaa tomb does not cared by aiadmk
கண்டுகொள்ளப்படாத ஜெயலலிதா சமாதி!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டுக்கோப்பாக கட்டிக்காத்த கட்சி அ.தி.மு.க.,. அவரது மறைவுக்கு பின் அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றாங்கள் நிகழ்ந்த வண்னம் உள்ளது. இதற்கு முன் அ.தி.மு.க., சார்பில் தினமும் அவரது சமாதி பராமரிக்கப்பட்டுவந்தது.

தினமும் கட்சி நிர்வாகிகள் பூக்களால் சமாதியை அலங்கரிப்பார்கள். ஆனால் சில நாட்களாக ஜெயலலிதா சமாதி எந்த பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகிறது. ஜெயலலிதா சமாதியில் காய்ந்த பூக்களே காணப்பட்டுவருகிறது. தொண்டர்கள் கொண்டு வரும் பூக்கள் மட்டும் பெறப்பட்டு, அவரது சமாதியில் தூவப்படுகிறது.

தவிர, ஜெயலலிதா சமாதியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்த வானமே இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா...என்ற பாடலும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி