ஆப்நகரம்

முதல்வருக்கு நோய்த்தொற்று சிகிச்சை : அப்பலோ மருத்துவமனை

தமிழக முதல்வர் ஜெயலைதாவுக்கு லண்டன் மருத்துவர் ரிச்சார்டின் அறிவுரைப்படி தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கபடுவதாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TOI Contributor 2 Oct 2016, 10:52 pm
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலைதாவுக்கு லண்டன் மருத்துவர் ரிச்சார்டின் அறிவுரைப்படி நோய்த்தொற்று சிகிச்சை அளிக்கபடுவதாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalithaa undergoing treatment for infection apollo hospitals says
முதல்வருக்கு நோய்த்தொற்று சிகிச்சை : அப்பலோ மருத்துவமனை


கடந்த 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் தமிழக முதலவர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :" தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து காய்ச்சல் பாதிப்பு முழுவதுமாக குணமடைந்துவிட்டது.



இந்த நிலையில், லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கேட்டறிந்து, முறையான நோய் ஏதிர்ப்பு மருத்துகள் வழங்குவது , நோய்த்தொற்று சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அவரின் பரிந்துரையின்பேரில், மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பது தெரியவந்தது. ரிச்சர்டின் ஆலோசனைப்படி, மேலும் சில நாள்கள் முதல்வருக்கு ஓய்வு தேவைப்படுவதால், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்று அதில் கூறப்படுகிறது.


English Summary : Tamil Nadu chief minister J Jayalalithaa is being treated for infection with appropriate antibiotics and other allied clinical measures, based on instructions from doctors including Dr Richard Beale, an international specialist from London.

அடுத்த செய்தி