ஆப்நகரம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பி.வி. ஆச்சார்யா வாதம்

பிறந்த நாளில், ரூ.2.15 கோடி பரிசு பெற்றதை, ஜெயலலிதா ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக, கர்நாடகா அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 16 Mar 2016, 5:03 pm
பிறந்த நாளில், ரூ.2.15 கோடி பரிசு பெற்றதை ஜெயலலிதா ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக, கர்நாடகா அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalithaa wealth case bv acharyas arguement
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பி.வி. ஆச்சார்யா வாதம்


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக, கர்நாடகா அரசு வழக்கறிஞர் பி.வி., ஆச்சார்யா புதன்கிழமை நடத்திய விவாதத்தின்போது, 1992ம் ஆண்டு தனது பிறந்த நாளில் ரூ. 2.15 கோடி பரிசு பெற்றதை, ஜெயலலிதா ஏற்கனவே, ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அவர் கூறியதாவது:
* சொத்து மதிப்புகளை நன்னடத்தை விதிமுறைகளின் படி, அரசுக்கு ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. * வங்கியில் வாங்கிய கடனை வருமானக் கணக்கில் சேர்த்துள்ளார் நீதிபதி குமாரசாமி.
* திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை என்பதால், வங்கி கடன் வருமானம் ஆகாது.
* சொத்துக் குவிப்பு தொடர்பாக, வழக்கு தொடரப்பட்ட பிறகே, அதிமுக., பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் சந்தா வசூல் நடந்துள்ளது.

இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.

அடுத்த செய்தி