ஆப்நகரம்

ஜெ., தண்டனை பெறுவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா தண்டனை பெறுவது உறுதி என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

TNN 7 Jun 2016, 9:35 pm
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா தண்டனை பெறுவது உறுதி என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Samayam Tamil jayalalithaa will be punished for sure evks elangovan
ஜெ., தண்டனை பெறுவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன்


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெறுவதில், நீண்ட இழுபறி காணப்படுகிறது. ஆனால், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றும், அதில் ஜெயலலிதா தண்டனை பெறுவது உறுதி என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டார்.

மேலும், திருப்பூரில் தேர்தலின்போது பிடிபட்ட கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி இல்லை. அதில், ரூ.2,000 கோடி இருந்ததாகவும், தேர்தல் ஆணையம், ஜெயலலிதா உள்ளிட்டோர் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி