ஆப்நகரம்

”பண அறையை திறக்க ஜெயலலிதாவின் கால் வெட்டப்பட்டதா?”-பொன்னையன் பகீர் தகவல்..!

கொடநாடு பங்களாவில் உள்ள ரகசிய பண அறையை திறப்பதற்காக ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

TNN 6 May 2017, 7:23 pm
கொடநாடு பங்களாவில் உள்ள ரகசிய பண அறையை திறப்பதற்காக ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalithas dead is mysterioussays c ponnaiyan
”பண அறையை திறக்க ஜெயலலிதாவின் கால் வெட்டப்பட்டதா?”-பொன்னையன் பகீர் தகவல்..!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது, அவரது கால்கள் வெட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவலை மருத்துவர்களும், சசிகலா தரப்பினரும் முற்றிலும் மறுத்தனர். இந்நிலையில் மீண்டும் ஜெயலலிதாவின் கால்கள் குறித்து சர்ச்சை கிளப்பியுள்ளார் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த சி.பொன்னையன்.

சமீபத்தில் கொட நாடு பங்களாவில் கொள்ளை முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை முயற்சியின் போது விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பொருட்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொடநாடு பங்களாவில் உள்ள ரகசிய அறையில், 25,000 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், அந்த அறையில் பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த பயோ மெட்ரிக் பூட்டை திறக்க வேண்டும் என்றால் ஜெயலலிதா கால் ரேகைகள் தேவைப்படும் எனவும் அதற்காகத்தான் ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த பண அறையை திறப்பதற்காக அவரது கால்களை சசிகலா வெட்டி எடுத்தார் எனவும் தகவல்கள் பரவுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்தால், இதுவரை அமைதியாக இருந்த ஜெயலலிதா கால்கள் குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

Jayalalitha's dead is mysterious,says C.Ponnaiyan

அடுத்த செய்தி