ஆப்நகரம்

சிறு வயதில் துன்பத்தை மட்டுமே அனுபவித்து உயர்ந்த ஜெயலலிதா

அம்மு என்கிற முதல்வர் ஜெயலலிதா தனது சிறுவயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்து வளர்ந்தார்.

TNN 6 Dec 2016, 2:38 pm
அம்மு என்கிற முதல்வர் ஜெயலலிதா தனது சிறுவயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்து வளர்ந்தார். அவரின் நல்லது, கெட்டதை பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாததும் இதற்கு காரணம். தனிமை வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் கே.ஜெ.சரசாவிடம், நாட்டியம் கற்க அம்முவை அவரது தாயார் சந்தியா அனுப்பி வைத்தார்.
Samayam Tamil jayalalithas eearly life
சிறு வயதில் துன்பத்தை மட்டுமே அனுபவித்து உயர்ந்த ஜெயலலிதா


ஜெயலலிதாவின் தாயார் சத்தியாவுக்கு அப்போது திரைப்படத்தில் நடிக்க வைப்பது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை. அம்முவுக்கும் திரைத்துறை கொஞ்சமும் பிடிக்காமல் இருந்தது.

அவரது வீட்டுக்கு அவரது அம்மாவை பார்க்க திரைத்துறையினர் வருவதுகூட பிடிக்காது என தனது நெருங்கிய தோழியிடம் கூறி உள்ளார்.

12 வயது இருக்கும் போது 1960ம் ஆண்டு, அம்முவின் அரங்கேற்றத்துக்கு அவரது தாய் சந்தியா ஏற்பாடு செய்தார். அம்முவின் நடனத்தை பார்த்த சிவாஜி கணேஷன் மெய்சிலிர்த்து பாராட்டினார். தங்க சிலை போல உள்ள நீ, வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவாய் என வாழ்த்தியுள்ளார். அவரின் வார்த்தை மெய்பிக்கும் வகையில் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார்.

அதன் பின் எம்.ஜி.ஆர் உடன் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகத்தை ஆண்டு கடைசியில் முதல்வராக இருக்கும் போதே உயிரிழந்தார்.

அடுத்த செய்தி