ஆப்நகரம்

ஜெயலலிதா சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா இன்று அஞ்சலி செலுத்தினார்.

TNN 8 Dec 2016, 12:40 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா இன்று அஞ்சலி செலுத்தினார்.
Samayam Tamil jayalalithas niece deepa jayakumar pays homage
ஜெயலலிதா சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி


டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்த ஜெயலலிதா, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் 6ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கு சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அஞ்சலில் செலுத்த போலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால், பூ முதலிய பொருட்களுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தீபாவை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் சூழ்ந்தனர். இதையடுத்து அங்கு கூட்டம் ஏற்பட்டது. பின், போலீஸார் துணையுடன் தீபா பத்திரமாக கிளம்பிச் சென்றார்.

அடுத்த செய்தி