சென்னை: ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான உத்தரவு வழங்கிய உத்தரகாண்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக்கரையில் அமைப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அந்த சிலையை ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் நிறுவ உத்தரகாண்ட் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான உத்தரவு வழங்கிய உத்தரகாண்ட் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த சிலை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட பா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ உத்தரகாண்ட் முதல்வருக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக்கரையில் அமைப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அந்த சிலையை ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் நிறுவ உத்தரகாண்ட் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான உத்தரவு வழங்கிய உத்தரகாண்ட் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த சிலை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட பா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ உத்தரகாண்ட் முதல்வருக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.