தமிழகக் காவல்துறையின் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் இருந்து வருகிறார். இவர் தற்போது பதவி நீட்டிப்பில் இருக்கிறார். இவரது பதவிக் காலம் வரும் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சூழலில் புதிய டிஜிபியாக ஜேகே திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆனார். தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.
இவருடன் யுபிஎஸ்சி பட்டியலில் ஜாஃபர்சேட், லட்சுமி பிரசாத் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பதவிகளை திரிபாதி வகித்தவர்.
இதையடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சூழலில் புதிய டிஜிபியாக ஜேகே திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆனார். தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.
இவருடன் யுபிஎஸ்சி பட்டியலில் ஜாஃபர்சேட், லட்சுமி பிரசாத் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பதவிகளை திரிபாதி வகித்தவர்.