ஆப்நகரம்

தி.மு.க.வில் இணைவது தற்கொலைக்கு சமமானது: செல்லூர் ராஜு

தி.மு.க.வில் யாரேனும் இணைந்தால் அது தற்கொலைக்கு சமம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Dec 2018, 1:12 pm
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின், தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்தார். இப்போது, அதிலிருந்து திமுகவுக்குத் தாவியுள்ளார்.
Samayam Tamil 154485739741632


இது குறித்துத மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "தி.மு.க.வில் கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி கொடுத்து அ.தி.மு.க. அழகு பார்த்தது" எனக் கூறினார்.

மேலும், "செந்தில்பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை. கரூர் மாவட்டத்தில் முன்பை விட அதிமுக சிறப்பாகவே வளர்ச்சியடைந்து உள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். அதுவும் தி.மு.க.வில் யாரேனும் இணைந்தால் அது தற்கொலைக்கு சமம்." என்று குறிப்பிட்டார்.

"பிரதமர் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடாமல் இருப்பது ஒரு பொருட்டல்ல. தேவையான நிதியை ஒதுக்கினாலே போதும்." என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி