ஆப்நகரம்

போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்

திரைப்பட நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், பெண் செய்தியாளர்களை பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் அநாகரிகமாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து உடனடியாக அந்தப் பதிவை அவர் நீக்கினார்.

Samayam Tamil 20 Apr 2018, 10:18 pm
திரைப்பட நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், பெண் செய்தியாளர்களை பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் அநாகரிகமாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து உடனடியாக அந்தப் பதிவை அவர் நீக்கினார்.
Samayam Tamil sv-sekar-journalist


எஸ்.வி.சேகரின் இந்த அநாகரிக பதிவு செய்தியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று பல்வேறு பத்திரிகையாளர்கள், பெண் செய்தி வாசிப்பாளர்கள் தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தையும் எஸ்.வி.சேகர் வீட்டையும் முற்றுகையிட முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

சாதாரணமாக முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்து மாலையில் விடுவிக்கும் காவல்துறை, பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 30 பேரை விடுவிக்காமல் வைத்துள்ளது. இரவு எட்டரை மணியை கடந்த பிறகும் அவர்களை விடுவிக்காமல் வைத்திருப்பதற்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (விஹியி) கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரிகமாகப் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்கு எதிராகப் போராடியவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்குமாறு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

- சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்

அடுத்த செய்தி