ஆப்நகரம்

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ஜே.பி.நட்டா உறுதி

நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

TNN 15 Apr 2017, 3:12 pm
சென்னை: நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
Samayam Tamil jp nadda assures special provision to tamilnadu in neet
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ஜே.பி.நட்டா உறுதி


சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் கட்டாயம் நடக்கும் என்றார்.

மேலும், “தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு மாநில அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்கிக்கொள்ளலாம். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த கிராமப்புற மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது கடினம் என்று வாதிடுகிறது தமிழக அரசு. அதற்காக, தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீடு செய்யலாம். அதற்கான, சிறப்புச் சலுகையை மத்திய அரசு அளிக்கும்” என்றும் நட்டா உறுதி கூறினார்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தமிழகச் சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்பதல் இன்னும் கிடைக்காத நிலையில், நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயம் நடக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி