ஆப்நகரம்

”சென்னையில்தான் இருக்கிறார் நீதிபதி கர்ணன்” - உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்..!

"நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார், அவர் எங்கேயும் தப்பித்து செல்லவில்லை" என அவர் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

TNN 11 May 2017, 12:40 pm
"நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார், அவர் எங்கேயும் தப்பித்து செல்லவில்லை" என அவர் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil judge karnan is in chennai says his lawyer in sc
”சென்னையில்தான் இருக்கிறார் நீதிபதி கர்ணன்” - உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்..!


கொல்கத்தா காவல்துறையினர் நீதிபதி கர்ணனை கைது செய்ய தேடி வரும் நிலையில், அவர் சென்னையில் தான் தங்கியிருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,” நீதிமன்ற தண்டனை உத்தரவு குறித்து, நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். நீதிபதி கர்ணன் சென்னையில்தான் தங்கி உள்ளார். அவர் வேறு எங்கும் தப்பித்து செல்லவில்லை. எனவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதி கர்ணனை கைது செய்ய ஆந்திர மாநில தடா பகுதிக்கு சென்ற கொல்கத்தா காவல்துறையினர், அங்கு அவரை கைது செய்ய முடியாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தங்கள் தேடுதலை கொல்கத்தா காவல்துறையினர் சென்னையில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Judge Karnan is in Chennai, says his Lawyer in SC

அடுத்த செய்தி