ஆப்நகரம்

நீதிபதி கர்ணன் இன்று சரணடைகிறார்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சரணடைய உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

TOI Contributor 15 May 2017, 11:36 am
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சரணடைய உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil judge karnan will surrender today
நீதிபதி கர்ணன் இன்று சரணடைகிறார்?


தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, தலைமை நீதிபதி உட்பட 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுளை சுமத்தினார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமருக்கு, அந்த ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால் நீதிபதி கர்ணன் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், தங்கி இருந்ததார். அவரை கைது செய்ய, மேற்கு வங்க டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சென்னை வந்தனர்.

ஆனால் அவர் காளஹஸ்தி சென்றதாகவும், தடா சென்றதாகவும் கூறப்பட்டது. தவிர
அவர் மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. அதனால் உறவினர் வீடுகளில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதிலும் எந்த பலனும் இல்லை.

இதற்கிடையில் நீதிபதி கர்ணன் மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாகவும், அவரின் தண்டனையை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று சரணடைய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா போலீசாரும் கர்ணனை கைது செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

அடுத்த செய்தி