கோவை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
கவுசல்யா வீட்டில் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்,இவர்கள் இருவரும் உடுமலை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை சரமாரியாக வெட்டியது.
இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா சிகிச்சைக்கு பின் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பரில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆணவ கொலைக்காக ஒரே நேரத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என வரலாற்றில் பதிவானது.
இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
Justice Alamelu Natarajan who has given verdict on Dalit youth Shankar murder case died due to breathing issue.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
கவுசல்யா வீட்டில் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்,இவர்கள் இருவரும் உடுமலை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை சரமாரியாக வெட்டியது.
இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா சிகிச்சைக்கு பின் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பரில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆணவ கொலைக்காக ஒரே நேரத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என வரலாற்றில் பதிவானது.
இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
Justice Alamelu Natarajan who has given verdict on Dalit youth Shankar murder case died due to breathing issue.