ஆப்நகரம்

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை!

சென்னை புளியந்தோப்பில் லைசென்ஸ் இல்லாத சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால், சிறார் நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது.

Samayam Tamil 10 Nov 2018, 7:22 pm
Samayam Tamil child traffic
சென்னை புளியந்தோப்பில் லைசென்ஸ் இல்லாத சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால், சிறார் நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பைக் ஓட்டி, வயதான பெண்மணி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.இதனையடுத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய புளியந்தோப்பு காவல்ஆய்வாளர், சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த சிறார் நீதிமன்ற நீதிபதி, இது போன்ற தவறை மீண்டும் செய்யாமல் இருக்க சிறுவனுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கினார். அதன் அடிப்டையில், இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சென்னை ஈகா தியேட்டர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில், டிராபிக் போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவால், இன்று மதியம் சிறுவனம் டிராபிக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இந்த தண்டனை மற்ற சிறுவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி