ஆப்நகரம்

2024 Loksabha Elections- பாஜகவுக்கு 25 எம்.பிக்கள்: அண்ணாமலை தேர்தல் கணக்கு!

பாஜகவுக்கு 25 எம்பிக்கள் 2024 மக்களவைத் தேர்தலில் (Loksabha election 2024) கிடைப்பார்கள் என அண்ணாமலை ஆருடம் கூறியுள்ளார்.

Samayam Tamil 28 Jun 2022, 12:25 pm
பாஜக அரசின் எட்டாண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரை பச்சையப்பா கல்லூரி அருகே நடைபெற்றது.
Samayam Tamil annamalai bjp


சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு நாகராஜன், மற்றம் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜக 2 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வென்றது. இந்த வெற்றி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

இணையும் சசிகலா, ஓபிஎஸ்: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

“ஐந்தாண்டு காலம் நம்முடைய உழைப்பின் ஊதியமாக தேர்தலில் வெற்றியை கொண்டு வந்திருக்கிறோம். எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இன்று இந்தியாவில் சில இடங்களில் இடைத் தேர்தல் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக கோவாவில் ஆட்சியில் அமர்ந்துள்ளோம்” என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசிய அவர், “ஜூலை 18ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற தான் போகிறது. அதில் நாங்கள் வேட்பாளராக அறிவித்து இருக்கும் வேட்பாளர் அதிக வாக்கு சதவீதம் பெற்று வெல்வார்.

எப்போது குடியரசு தலைவருக்கான தேர்தல் வேட்பாளரை திரெளபதி முர்மு என்று அறிவித்தோமோ அப்போதே தமிழக முதல்வருக்கு காய்ச்சல் வந்து விட்டது. இந்த மாதிரி சித்தாந்தம் இருக்கும் கட்சியில் நான் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!
மோடியை போல் அடித்தட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக யோசிக்கும் குட்டி மோடியாக வாழ வேண்டும் என்றால் தனி மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே உருவாக முடியும். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி மக்கள் கட்சியா இல்லை குடும்ப கட்சியா என்றே தெரியவில்லை. எது அரசு எது குடும்பம் என்றே தெரியவில்லை. தற்போது கஞ்சாவின் தலைநகரமாக சென்னை விளங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பார்க்கும் பொழுது இது போன்ற தலைவர்கள் இருக்கும் கட்சியில் நாமும் இருக்கிறோம் என நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் கண்டிப்பாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக சார்பில் வெற்றிப்பெறுவர். நமது ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் நடக்கும்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி