2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் இதன் இரண்டாம் பாகத்தில் திமுகவினரின் கருப்பு பணம், மற்றும் ஊழல் விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறினார். 1967 முதல் தமிழ்நாட்டில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன.
தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். அப்படியிருக்க அண்ணாமலை அதிமுகவின் ஊழல் பட்டியலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவதாக கூறுகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
“ஊழலை எதிர்க்கும் போது ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. நான்கு பாகமாக இந்த பட்டியல் வெளியாகும் போது பிற கட்சிகளின் ஊழல் விவரங்களும் வெளிவரும். இன்னும் பத்து தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும் ஊழலுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பேன்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த அண்ணாமலை தற்போது ஊழல் பட்டியல் குறித்தும் பேசியிருப்பதால் அக்கூட்டணி அமைவதில் மேலும் இடைவெளி அதிகமாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் இதன் இரண்டாம் பாகத்தில் திமுகவினரின் கருப்பு பணம், மற்றும் ஊழல் விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறினார். 1967 முதல் தமிழ்நாட்டில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன.
தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். அப்படியிருக்க அண்ணாமலை அதிமுகவின் ஊழல் பட்டியலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவதாக கூறுகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
“ஊழலை எதிர்க்கும் போது ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. நான்கு பாகமாக இந்த பட்டியல் வெளியாகும் போது பிற கட்சிகளின் ஊழல் விவரங்களும் வெளிவரும். இன்னும் பத்து தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும் ஊழலுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பேன்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த அண்ணாமலை தற்போது ஊழல் பட்டியல் குறித்தும் பேசியிருப்பதால் அக்கூட்டணி அமைவதில் மேலும் இடைவெளி அதிகமாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.