ஆப்நகரம்

யார் இந்த சண்முகம்? தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இன்று பொறுப்பேற்றார்!

புதிதாக நியமிக்க சண்முகம், இன்று முறைப்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 30 Jun 2019, 3:28 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் இவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. தமிழக அரசியல் வரலாற்றில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Shanmugam


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், 1981ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டார்.

தலைமை செயலாளராக சண்முகம், டிஜிபி-யாக திரிபாதி நியமனம்!

இவர் 1985ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளராக பதவி வகித்துள்ளார்.

இவர் அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் தொடர்ந்து நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்தவர். இவர் மீதான நம்பிக்கை காரணமாக, ஜெயலலிதா, கருணாநிதி முதலமைச்சர்களாக இருந்த போது, சண்முகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதாவது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா கேண்டீன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இரு திட்டங்களிலும் அரசுக்கு அதிக சுமை ஏற்படாத வண்ணம் சிறப்பாக செயல்படுத்திக் காட்டினார். இதன்மூலம் பல்வேறு மாவட்ட ஆட்சியாளர்களின் நன்மதிப்பை பெற்றார்.

அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் நம்பிக்கைக்கு உரியவராக சண்முகம் திகழ்கிறார். இவர் இன்று முறைப்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த செய்தி