சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசின் மீதும் காவல்துறை மீதும் குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த நிலையில், ஸ்டாலினுக்கு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
இந்த அறிக்கையில் சாத்தான்குளம் விவகாரத்தில், திமுக ஆள்வைத்து அரசியல் செய்வதாகச் சாடியுள்ளார். மேலும், கனிவுள்ளம் கொண்ட முதலமைச்சர் என்றும், அறிக்கை அரசியல்வாதி ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டு அரசு எங்கே தவறிழைத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளை சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களை திரட்டுவது, பிரேதபரிசோதனை அறிக்கையை பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.
அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்கள். மேலும் இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையை பெற்றுத்தருவோம் என்பதையும் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக இவ்வழக்கு
கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான ஊக்ஷஐ-யிடம்
ஒப்படைக்கப்படும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் அவர்கள் முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? அறிக்கை அரசியல்வாதி திரு. ஸ்டாலின் அவர்கள் இதனை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுவதும் அதற்கு பக்கபலமாக தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்க திமுக திட்டமிட்டு மலிவான அரசியலை செய்து வருகிறது” கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் விருதிநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று விருதுநகர் மாவட்டக் கழகத்தின் பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டதாக தலைமைக் கழகம் அறிவித்தது. அதற்குப் பிறகு அவர் வெளியிடும் முதல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையில் சாத்தான்குளம் விவகாரத்தில், திமுக ஆள்வைத்து அரசியல் செய்வதாகச் சாடியுள்ளார். மேலும், கனிவுள்ளம் கொண்ட முதலமைச்சர் என்றும், அறிக்கை அரசியல்வாதி ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டு அரசு எங்கே தவறிழைத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளை சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களை திரட்டுவது, பிரேதபரிசோதனை அறிக்கையை பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.
அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது.
கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான ஊக்ஷஐ-யிடம்
ஒப்படைக்கப்படும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் அவர்கள் முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? அறிக்கை அரசியல்வாதி திரு. ஸ்டாலின் அவர்கள் இதனை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுவதும் அதற்கு பக்கபலமாக தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்க திமுக திட்டமிட்டு மலிவான அரசியலை செய்து வருகிறது” கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் விருதிநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று விருதுநகர் மாவட்டக் கழகத்தின் பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டதாக தலைமைக் கழகம் அறிவித்தது. அதற்குப் பிறகு அவர் வெளியிடும் முதல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.