ஆப்நகரம்

திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் கலைஞா் – கி.வீரமணி பேச்சு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, கலைஞா் தனிமனிதரல்ல. திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என்று தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Aug 2018, 4:02 pm
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, கலைஞா் தனிமனிதரல்ல. திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என்று தொிவித்துள்ளாா்.
Samayam Tamil K Veeramani


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தொடா்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் திராவிடா் கடழகத் தலைவா் கி.வீரமணி இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தி.மு.க. தலைவா் கருணாநிதி தனி மனிதர் அல்ல. அவா் திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம். நான்காவது அத்தியாயம் தொடங்கப்பட வேண்டும். திராவிடா் முன்னேற்றக் கழகத்திற்கு அதன் தாய் கழகமான திராவிடா் கழகம் என்றும் கவசமாக இருக்கும்.

தி.மு.க.வுக்கு கேடயமாக இருக்க வேண்டிய நேரத்தில் திராவிடா் கழகம் கேடயமாகவும், வாளாக சுழள வேண்டிய நேரத்தில், வாழாக சுழலும். கருணாநிதியின் ஆற்றல் மிகுந்த தலைமை, தி.மு.க.வின் 50 ஆண்டு தலைமை என்பதை நிரூபித்துள்ளாா்கள் போலவே கட்சி கட்டுக்கோப்பாக இருந்து தி.மு.க. நடைபேட வேண்டும். அதற்கு திராவிடா் கழகம் என்றும் துணைநிற்கும் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி