ஆப்நகரம்

கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி உபரிநீர் திறப்பு !

கபினி அணை நிரம்பியதையடுத்து வினாடிக்கு 15, 000 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 10:15 am
கபினி அணை நிரம்பியதையடுத்து வினாடிக்கு 15, 000 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 12BGHDKOTEKABINI


கர்நாடகாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி தோன்றும் இடமான குடகு மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 8 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து கடந்த 14 ஆம் தேதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைந்தது.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து நீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்துவரும் நிலையில், கபினி அணையில் இருந்து வரும் உபரி நீரால் நீர்மட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி