ஆப்நகரம்

செம ஜாலி ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களாம்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நாகை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNN 1 Nov 2017, 11:20 am
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நாகை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil kadalur nagapattinam district school announced leave due to heavy rain
செம ஜாலி ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களாம்!


தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவையொட்டிய பகுதியில் நிலைகொண்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுலும் , டெல்டாவிலும் மழை பரவலாக பெய்து வருகிறது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மழையால் நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலூகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூரை தவிர்த்து அனைத்து தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

kadalur, nagapattinam district school announced leave due to heavy rain

அடுத்த செய்தி