ஆப்நகரம்

பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 29, 568 கன அடி நீர் திறப்பு

தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 29, 568 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2018, 5:00 pm
தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 29, 568 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil img-20171224-wa0037-largejpg


தஞ்சை மாவட்ட கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கல்லணை கால்வாய் கரைகளை ஆய்வு செய்தார். நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு அதிகரித்ததால், கல்லணைக்கு வினாடிக்கு28 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 9ஆயிரத்து 512 கன அடியும் ,வெண்ணாற்றில் 9ஆயிரத்து 14 கன அடியும், கல்லணை கால்வாயில் 2 ஆயிரத்து 513 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 7 ஆயிரத்து 18 கன அடி நீரும் திறக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் அதிகபட்ச அளவாக 9 ஆயிரத்து 500 கன அடிக்கும் மேல் நீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி கல்லணையிலிருந்துடெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு29, 568 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

அடுத்த செய்தி