ஆப்நகரம்

புரட்சியின் வித்து தனி சிந்தனையே- கமல் டுவிட்

தொடா்ந்து அரசியல் சம்பந்தமாக தனது அதிகாரப்பூா்வ டுவிட்டா் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வந்த நடிகா் கமல்ஹாசன் இன்று புதிய பதிவை வெளியிட்டுள்ளாா்.

TOI Contributor 10 Aug 2017, 11:58 pm
தொடா்ந்து அரசியல் சம்பந்தமாக தனது அதிகாரப்பூா்வ டுவிட்டா் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வந்த நடிகா் கமல்ஹாசன் இன்று புதிய பதிவை வெளியிட்டுள்ளாா்.
Samayam Tamil kamahasans new tweet
புரட்சியின் வித்து தனி சிந்தனையே- கமல் டுவிட்





நடிகா் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், 'விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்' என்று பதிவிட்டுள்ளாா்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, 'பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்' என்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற முரசொலி பவளவிழாவில் நடிகா் கமல்ஹாசன் கலந்து கொண்டாா். விழாவில் அவா் பேசுகையில், திராவிடம் என்பது தமிழ் நாட்டில் மட்டுமோ அல்லது தென் இந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து சமவெளி நாகாிகம் முதலே திராவிடம் உள்ளது.

திராவிடம் உள்ளவரை திராவிடம் அழியாது என்று ஜனகனமன பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிடம் என்பது வாக்கு எண்ணிக்கை அல்ல. மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது என்று பேசியிருந்த நிலையில் அவா் டுவிட்டா் பதிவை வெளியிட்டுள்ளாா்.

Kamahasan’s New tweet

அடுத்த செய்தி