ஆப்நகரம்

ஆட்டம் போடும் சினிமாக்காரன் நாட்டை ஆள முடியுமா? சுவாமி சரமாரி கேள்வி!

சினிமாக்காரன் கமல் ஒருபோதும் நாட்டை ஆள முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.

TNN 17 Sep 2017, 3:57 pm
சென்னை: சினிமாக்காரன் கமல் ஒருபோதும் நாட்டை ஆள முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil kamal cant rule the country says swamy
ஆட்டம் போடும் சினிமாக்காரன் நாட்டை ஆள முடியுமா? சுவாமி சரமாரி கேள்வி!


ஊர் வம்பை இழுப்பதற்காகவே பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமியை வைத்துள்ளனர்.

யாரையாவது கிண்டி, கிளறி பிறர் வசைகளை வாங்கிக் கட்டிக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது சமீபத்திய இலக்கு நடிகர் கமல் ஹாசன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் அரசியல் பிரவேசம் வரை எதையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சினிமாக்காரன் நாட்டை ஆளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கு நாட்டின் பொருளாதாரம் குறித்து என்ன தெரியும்? ஏ,பி,சி கூடத் தெரியாது. சினிமாவில் ஆட்டம் போடும் ஒருவரால் நாட்டை ஆள முடியாது.

அதேபோல் ரஜினியும் ஒருபோதும் அரசியலுக்கு இழுக்கப் போவதில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

Kamal Cant rule the country says Swamy.

அடுத்த செய்தி